சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
7 வினாடிகளுக்குள் 132 மாணவ மாணவிகள் ஒரே தருணத்தில் 500 ஓடுகளை உடைத்து உலக சாதனை. சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் சாதனை சான்றை வழங்கி பாராட்டு.
சேலம் சாரதா மெட்ரிக் பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி நிவிஷா பவுண்டேஷன் கராத்தே மாணவ மாணவிகள் 130க்கும் மேற்பட்டவர்கள் கைகளால் ஓடுகளை உடைத்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி சேலம் சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. 132 மாணவ மாணவிகள் 7 வினாடிகளில் 500 ஓடுகளை கைகளினால் உடைத்து சாதனை படைத்தனர். இதில் 2-ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளின் இந்த சாதனை நிகழ்வை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ஏற்பாடு செய்திருந்தனர். அந்த அமைப்பின் இயக்குனர் ஹேமலதா உலக சாதனையாக பதிவு செய்ய வருகை புரிந்து இருந்தார். அதற்கான அங்கீகார சான்றிதழை அந்த அமைப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்த இந்த சாதனை நிகழ்வில் சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் திருமதி கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை நிகழ்வினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தயார் நிலையில் இருந்த 132 வீரர் மற்றும் வீராங்கனைகள் அதற்கான கவுண்டவுண்ட் டவுன் தொடங்கியவுடன் ஒரே நேரத்தில் 500 ஓடுகளை தங்களது கைகளால் உடைத்து வெற்றி கரமாக சாதனையை நிவர்த்தி செய்தனர். இதனை அடுத்து இந்த மாணவ மாணவிகளின் சாதனை அங்கீகரிக்கப்பட்டு நோபல் உலக சாதனை புத்தக நிர்வாகிகளால் அதற்கான சாதனை சான்று வழங்கப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் திருமதி கீதா சாதனை மாணவ மாணவிகளுக்கு சாதனை சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் விழாவில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் சேலம் ஸ்ரீ சாரதா உடற் கல்விஇயல் கல்லூரி முதல்வர் சசிரேகா, ஸ்ரீ சாரதா பால மந்திர் ஆண்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர் பாரதி, ஸ்ரீ சாரதா மெட்ரிகுலேஷன் பெண்கள் பள்ளி முதல்வர் செண்பகவல்லி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆரோக்கிய சோபியா, நிவாஷா பவுண்டேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேர்ல்ட் சோடகான் இந்திய கராத்தே அமைப்பைச் சேர்ந்த குப்புராஜ் பிச்சு, மணி மற்றும் பயிற்சியாளர் அருண் பிரபு சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: