சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் தெய்வா அறக்கட்டளையின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த இளம் தொழிலதிபர் செல்வகுமார்.
சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம், வழக்கறிஞர் பணி மாமன்ற உறுப்பினர் பணி உள்ளிட்டவைகளுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொது மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றினை தொடங்கி நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் காலை சிற்றுண்டிகளை வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தெய்வா அறக்கட்டளை சார்பாக இன்று VS செல்வ மாளிகை ஜூவல்லரி உரிமையாளர் செல்வகுமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து 38 வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. தெய்வா அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகரின் மிகச்சிறந்த இளம் தொழிலதிபரான வி எஸ் செல்வ மாளிகை நிர்வாக இயக்குனர் செல்வகுமார் கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்கிறார்.
0 coment rios: