இந்த நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பிரவேஷ் தனது நண்பருடன் பூனாச்சி- வெள்ளித்திருப்பூர் சாலையில் உள்ள குண்டாங்கல்மேடு பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளான். பின்னர், பிரவேஷ் மட்டும் குட்டையில் இறங்கி ஆழமான பகுதியில் குளித்ததாக தெரிகிறது.
அப்போது, நீச்சல் தெரியாததால் பிரவேஷ் தண்ணீரில் மூழ்கினான். இதைத் தொடர்ந்து, பாலத்தின் மேல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த அவனுடைய நண்பர் சத்தமிடவே, அருகில் இருந்தவர்கள் குட்டையில் மூழ்கிய பிரவேசை மயங்கிய நிலையில் மீட்டனர்.
அதன்பின்னர், அவனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரவேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: