இந்த விபத்தில் கார், லாரியின் முன்பகுதி அப்பளம் நொறுங்கியது. இதில், மூர்த்தியும், லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் தாத்தையங்கார் கோட்டையை சேர்ந்த பெருமாள் என்பவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூர்த்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பெருமாள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: