தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜி.ஜவகர், தற்போது சி.பி.சி.ஐ.டி. வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல, திருப்பூர் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளராக பணியாற்றி வந்த ஏ.சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் ஈரோடு மாவட்டத்துக்கு வந்து பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: