வெள்ளி, 28 மார்ச், 2025

விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் பஞ்சாப் முதல்வரை கண்டித்து சேலத்தில் தமிழக இயற்கை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் பஞ்சாப் முதல்வரை கண்டித்து சேலத்தில் தமிழக இயற்கை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம். 

சேலம கோட்டைமைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சம்யுத் த கிசான் மோர்சா அரசியல் சார்பற்றது ( skM)NP விவசாயிகள் சங்கம்சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொண்டலாம்பட்டி எம்தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகளை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்து அச்சுறுத்தி வரும் முதலமைச்சர் பகவத் தாமான் அரசைவன்மையாக கண்டிக்கிறோம் நிபந்தனின்றி விடுதலை செய்திடு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டுவர வேண்டியும், எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரை உடனே நிறைவேற்று, 120 நாட்கள் கடந்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடரும் ஜக் ஜித்சிங்டல்  லெவால் உயிரை காப்பாற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்லமுத்து உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: