சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தைச் சேர்ந்த வேங்கை அய்யனார் என்ற தொழிலதிபர் தயாரித்து நடித்துள்ள வெட்டு திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்கு முன்பு தயாரிப்பாளரின் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம் மல்லுரை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் வேங்கை அய்யனார். இவர் ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பில் அறிமுக நாயகனாக ராக்கின் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வந்து உள்ள வெட்டு திரைப்படம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஐந்து தியேட்டரில் வெளியானது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளரும் புதுமுக நாயகனும் திரையரங்கிற்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த சேலம் வேங்கை அய்யனார் ஆதரவாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவையும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேங்கை அய்யனார் ரசிகர்களுடன் திரையரங்கினுள் சென்று தான் இயக்கிய திரைப்படத்தை பார்த்து ரசித்தார். இதன் காரணமாக 5 திரையரங்க பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
0 coment rios: