புதன், 5 மார்ச், 2025

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் மோதல்

கோபியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தள்ளுமுள்ளு மற்றும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினராக கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூர், நகர, வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே ஏ.செங்கோட்டையன் பேசி முடித்ததற்கு பிறகு அந்தியூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, அவர் மேடைக்குச் சென்று சார்பில் நடக்கும் எந்த கூட்டத்திற்கும் தங்களுக்கு அழைப்பு விடுவதில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை மேடையில் ஏறி முன் வைத்தார். அப்போது அதிமுகவினர் இடையே ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலானது.

உடனடியாக அந்த கேள்வி கேட்ட நபர் வெளியேற்றப்பட்டார். இதனை படம் பிடித்த கேமராக்களை அதிமுக நிர்வாகிகள் தாக்கியதில் கேமரா உடைந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும் பொழுது அந்தியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ.எம்.ஆர். ராஜா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நபரை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தியூர் சட்டமன்ற தொகுதி தோற்றத்திற்கு இ.எம்.ஆர்.ராஜா தான் காரணம் எனவும் பரபரப்பு குற்றம் சாட்டினார். அதற்கு தகுந்த ஆடியோ சிடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் கேள்வி கேட்ட அந்த நபரை அதிமுக உறுப்பினர்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்படுத்தது. கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் அந்தியூர் ஒன்றிய இளைஞர் அணி பாசறை அமைப்பாளர் பிரவீன் குமார் என்பது தெரியவந்துள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: