ஞாயிறு, 2 மார்ச், 2025

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மனைவி உயிரிழந்தார். கணவன், மகன் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா சின்னகாவூர் பி.என்.பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி வனிதா (41). மகன் பிரசித். இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அம்மாபேட்டை- அந்தியூர் சாலையில் பூனாச்சி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் வனிதா படுகாயம் அடைந்தார். சிவகுமார், அவருடைய மகன் பிரசித் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வனிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், படுகாயமடைந்த சிவகுமார், பிரசித் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: