சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ரம்ஜான் திருநாள் சிறப்பு தொழுகை. சேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடு.
இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக ஈகை திருநாள் எனக் கருதப்படும் ரம்ஜான் திருவிழா நேற்று அரபு நாடுகளில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் ரம்ஜான் திருவிழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி சேலம் மாநகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் கோட்டை பகுதியில் உள்ள மேல் தெரு பள்ளிவாசலில் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பள்ளிவாசலின் முத்தவல்லி அப்துல் காதர் முன் நின்று நடத்திய இந்த சிறப்பு தொழுகையில் முன்னாள் மூத்த வழி அமான் என்கின்ற நாசர் கான், கமிட்டி நிர்வாகிகள் பண்டு நூர் பாபு மற்றும் யாரப் உள்ளிட்டவர் முன்னிலை வகித்த இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து உலக அமைதியை வலியுறுத்தியும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் விவசாயம் செழிக்கவும் குடும்ப மேன்மையை வலியுறுத்தியும் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை நிறைவடைந்த பிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடு இன்றி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
0 coment rios: