ஞாயிறு, 30 மார்ச், 2025

ரமலான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிறை தெரிந்ததால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம்  30-03-2025 அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது.

ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 31-03-2025 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் திங்கட்கிழமை 31-03-2025 தேதி கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரோடு ஜாமிஆ மஜீத் பள்ளியில் முத்தவல்லிகள் மாவட்ட அரசு காஜி கிபயத்துல்லா மற்றும் ஜமாத்தார்கள் பிறை தகவல்கள் தெரிவிப்பதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பிறை தெரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: