எனவே, 5 மாத கூலி கேட்டு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அந்தியூர் கிளை சார்பில் அந்தியூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்கள் கூலி வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஒப்பாரி வைத்தனர்.
இந்த போராட்டத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பாளையம், பிரம்மதேசம், நகலூர், சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: