வியாழன், 24 ஏப்ரல், 2025

அந்தியூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.
எனவே, 5 மாத கூலி கேட்டு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அந்தியூர் கிளை சார்பில் அந்தியூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்கள் கூலி வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஒப்பாரி வைத்தனர்.

இந்த போராட்டத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பாளையம், பிரம்மதேசம், நகலூர், சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: