ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் சிறுவர், சிறுமிகள் என பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, பயங்கரவாதிகள் தாக்குத லில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மனிதநேயத்தின் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: