ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் SDCBA நிர்வாகிகள் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.

 சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் SDCBA நிர்வாகிகள் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.

என் உரிமை என்பது நான் பிறக்கும் போதே என்னோடு வந்தது. அந்த உரிமையை மதிக்காத எந்ந ஒரு அமைப்பிலும் நான் இருக்கப்போவதில்லை என்று தனது மத்திய அமைச்சர் பதவியை கூட துச்சமென தூக்கி எறிந்த பாபாசாகிப் அண்ணல் அம்பேத்காரின் 134-வது பிறந்த நாளான இன்று சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் சட்ட மாமேதைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர ஜெ.மு. இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் முருகன் மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் சட்ட மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சங்கத் தலைவர் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: