ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. சேலம் அயோத்தியா பட்டணத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவரிகள் பி.எல். எ.2 மற்றும் குட் கமிட்டி உறுப்பினர்கள் பிஎல்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் பேச்சு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. சேலம் அயோத்தியா பட்டணத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவரிகள் பி.எல். எ.2 மற்றும் குட் கமிட்டி உறுப்பினர்கள் பிஎல்சி உறுப்பினர்கள்  ஆலோசனை கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் பேச்சு. 

சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள்  ஆலோசனைக் கூட்டம் சேலத்தை அடுத்துள்ள அயோத்தியா பட்டணம்  பகுதியில் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் விஜயகுமார், தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய முக்கிய நிர்வாகிகள்  முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் கலந்து கொண்டு சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய  ஒன்றிய திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தேர்தல் காலகட்டங்களில் பாக நிலை முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று செல்போன் செயலி வாயிலாக விளக்கி கூறிய அவர், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்  என்று நம்பிக்கை தெரிவித்த எஸ்.ஆர். சிவலிங்கம் அதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் செயலாற்றி திமுக வெற்றி பெற கண்ணுறங்காமல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே தமிழக முதலமைச்சரின் மற்றும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எது வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தோகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியிருந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் 234 தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் உறுதிபட  தெரிவித்தார். இதற்காக எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியில் அமைத்தே தீருவோம் என திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சேலம் மாவட்ட அமைப்பாளர் பிரெண்ட்ஸ் ரமேஷ், சேலம் கிழக்கு மாவட்ட வடக்கு ஒன்றிய செயலாளர்  ரத்தினவேல், குமார், அருணா, சுரேஷ்குமார், கௌதமன், முத்து, சங்கர், கோபால், பாபு, உட்பட முக்கிய கட்சி நிர்வாகிகள் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த  உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: