செவ்வாய், 15 ஏப்ரல், 2025

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.

என் உரிமை என்பது நான் பிறக்கும் போதே என்னோடு வந்தது. அந்த உரிமையை மதிக்காத எந்ந ஒரு அமைப்பிலும் நான் இருக்கப்போவதில்லை என்று தனது மத்திய அமைச்சர் பதவியை கூட துச்சமென தூக்கி எறிந்த பாபாசாகிப் அண்ணல் அம்பேத்காரின் 134-வது பிறந்த நாளன்று தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் நாகா. அரவிந்தன், புரட்சியாளரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆதரவாளர்கள் என திரளானோர கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: