சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் தாரமங்கலம் அருகே அமைக்கப்பட்டுள்ள எம் சாண்ட் மணல் சேமிப்புக்களங்கால் 1500 மணல் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு. எம் சாண்ட் சேமிப்புக் கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து மனு வழங்கப்பதற்காக வந்திருந்தனர். சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் கண்ணையன் சந்திரன் பழனிசாமி மற்றும் செல்வம் உட்பட ஏராளமான அளித்திருந்த புகார் மனுவில், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த சங்கத்தில் தாரமங்கலத்தைச் சார்ந்த இரண்டு சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கடந்த ஒன்றரை வருடங்களாக மணல் குவாரிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதை பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு விற்ற எம் சாண்டை கிரஷர் உரிமையாளர்கள் எம்சாண்ட் மணலை 5000 ரூபாய்க்கும் பிசென்ட் மணலை 6 ஆயிரம் ரூபாய்க்கும் வொர்க்கின்றனர். தீவட்டி பட்டியில் சூர்யா ப்ளூ மெட்டல் கிரஷர் நடத்திவரும் டி பி எஸ் சேகர் என்பவர் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் ஹோண்டா கம்பெனிக்கு அருகில் எம் சாண்ட் சேமிப்புக் கிடங்கு அமைத்துள்ளார். தாரமங்கலத்தில் சுமார் 1500 லாரி மற்றும் மஸ்தான் உரிமையாளர்கள் எம்சாண்ட் ஜல்லி சப்ளை செய்து குடும்ப ஜீவனம் செய்து வருகிறார்கள். மேற்கண்ட இடத்தில் நாங்கள் நேரடியாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறியதாகவும் ஆனால் அதன் உரிமையாளர் தங்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுகிறார் என்றும் இதனால் எங்களது வாழ்வாதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். எனவே சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்கள் மீது கருணை கூர்ந்து சூர்யா ப்ளூ மெட்டல்ஸ் கிரஷர் உரிமையாளர் டி பி எஸ் சேகர் அமைத்திருக்கும் எம் சாண்ட் சேமிப்பு கலங்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டுமானாலும் எங்களுக்கு குறையும் மிரட்டல் விடுத்த டி பி எஸ் சேகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கி உதவி புரியுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனதில் குறிப்பிட்டிருந்தனர்.
0 coment rios: