சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே 1.84 ஏக்கர் நிலம் போலியாவணன் மூலம் பத்திர பதிவு செய்து அபகரிப்பு. நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.
சேலம் மாவட்டம் ஓமலூர் பவளத்தானூர் பகுதியை சார்ந்தவர்கள் சண்முகம் கருப்பாயி அம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு தெச விளக்கு கிராமத்தில் 1.84 ஏக்க நிலம் உள்ளது. இந்த நிலம் தற்பொழுதும் கருப்பாயி அம்மாள் அனுபவத்தில் உள்ளது. இந்த நிலையில் கார்த்திக் மற்றும் முருகன் என்ற இருவர் தாரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதியில் போலி ஆவணம் பதிவு செய்து நிலத்தை அபகரித்ததோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து செய்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கருப்பாயம்மாள் மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்து அடைந்ததோடு மட்டுமல்லாமல் மிகுந்த உடல் நல பாதிப்புக்கும் உள்ளாகி உள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இருவரிடமும் கேட்டபோது இந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என்றும் மேல் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் தனது குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை எடுத்து பாதிக்கப்பட்ட கருப்பாயம்மாள் தனது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக வந்திருந்தார். அந்த மனுவில் போலி ஆவணங்கள் மூலம் தனக்கு சொந்தமான 1.84 ஏக்கர் நிலத்தை போலி பத்திர பதிவு செய்து அதனை வெறுக்க முயற்சித்த கார்த்திக் மற்றும் முருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 coment rios: