அதன்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்கு மார், சதீஷ்குமார் ஆகியோர் ஈரோடு திண்டல், பழையபாளையம் மற்றும் மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ ஓட்டல்களில் கடந்த 2 நாட்களாக 'திடீர்' சோதனையில் ஈடுபட்டனர். இதில் 2 ஓட்டல்களில் சமைக்கப்பட்ட இறைச்சி குளிர்பதன பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2 ஓட்டல்களிலும் 18 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுகாதார மில்லாமல் சமையல் கூடத்தை பராமரித்த வகையில் 2 ஒட்டல்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
0 coment rios: