சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. சேலம் அரியான் ஊரில் நடைபெற்ற பாகநிலை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் பேச்சு.
சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய பாக நிலை முகவர்கள் மற்றும் வாக நிலை குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தை அடுத்துள்ள அரியலூர் பகுதியில் நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், திமுக நிர்வாகிகள் மலர்விழி வீரபாண்டி ராஜா மற்றும் டாக்டர் தருண் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் கலந்து கொண்டு வீரபாண்டி ஒன்றிய திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் தேர்தல் காலகட்டங்களில் பாக நிலை முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று செல்போன் செயலி வாயிலாக விளக்கி கூறிய அவர் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த எஸ் ஆர் சிவலிங்கம் அதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் செயலாற்றி திமுக வெற்றி பெற கண்ணுறங்காமல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியில் அமைத்தே தீருவோம் என திமுக நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சேலம் மாவட்டஅமைப்பாளர் பிரெண்ட்ஸ் ரமேஷ் ஆறுமுகம் உட்பட முக்கிய நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: