சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ரமலான். 350 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கி மகிழ்ந்த சேலம் கோட்டை ஷபி பாய்....
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஷபி பாய், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆண்டுதோறும் ஈகை திருநாளான ரமலான் பெருநாளன்று ஏழை எளியவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை செய்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். அதன் அடிப்படையில் நடபாண்டிற்கான புனித ரமலான் நல உதவிகள் 350 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் சேலம் கோட்டை ஷபி பாய் தனது சொந்த செலவில் வழங்கி மகிழ்ந்தார்.
மேலும் சேலம் கோட்டை அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மாணவ மாணவிகளுக்கான நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சேலம் கோட்டை ஷபி பரிசு பொருட்களையும் ஊனமுற்றோர் மற்றும் ஆண்கள் பெண்களுக்கு இலவச துணி மணிகளையும் வழங்கி மகிழ்ந்தார்.
0 coment rios: