தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்யுஎஸ்ஆர்பி சப் இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி துவங்குகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணைய வழித் தேர்வுகள் முழு மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: