சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 28வது ஆண்டு விழா. துரை ரீதியாக சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லுரியின் 28வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பெருமைமிக்க சோனா கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். தேர்ச்சி சதவீதத்தின் முன்னிலை, மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறித்தும், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனைகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியதில் இந்தியாவில் முதன்மை இடம், மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது என கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் கல்லுரியின் துறைசார்ந்த நடவடிக்கைகள், மற்றும் பேராசிரியர்களின் பங்களிப்பு, மாணவ மாணவிகளின் ஆராய்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களை ஆண்டு அறிக்கையாக சமர்பித்தார்.
இந்த விழாவில் சிறப்புவிருந்தினர்களாக சென்னை ஜி.இ வெர்னோவா நிறுவனத்தின் இந்திய மனிதவளத் தலைவர் பிரபு ஜெ.பி, மற்றும் ஹுன்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தரணிஜெயபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்புரையாற்றினார்கள், மேலும் பல பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும், சிறந்து விளங்கிய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு துறை வாரியாக பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்கள்.
இறுதியாக எம்.பி.ஏ துறைத்தலைவர் முனைவர்.அஞ்சனி நன்றியுரையாற்றினார். இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் வீ.கார்த்திகேயன், முதல்வர்கள் கனகராஜ், காதர்நவாஷ், கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: