வெள்ளி, 11 ஏப்ரல், 2025

பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் ராஜரிஷி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் ராஜரிஷி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி..

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக தமிழ் மாதங்களில் வரும் பங்குனி மாதம் உள்ளது. அதன் அடிப்படையில் பங்குனி உத்திர திருவிழாவினை ஒட்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் உள்ள முருகப்பெருமானுக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில்களிலும் இன்று ஆறுமுகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டியில் உள்ள சேலம் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி ராஜரிஷி ஆசிரமத்தின் திருக்கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டு மூலவரான பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு பால்குட ஊர் படம் நடைபெற்று தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ராஜரிஷி ஆசிரமம் நிர்வாகி சுவாமி பாபு அவர்களின் தலைமையில்  எம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு பாட தண்டாயுதபாணி  ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது திருக்கோவிலில் பிறந்த ஏராளமான பக்தர்கள் சரவண கோஷங்களை எழுப்பி முருகப் பெருமானை வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. பின்னர் உச்சிக்காத பூஜை மற்றும் திருக்கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்களும் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து மாலை சேலம் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பங்குனி உத்திர விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜரிஷி ஆசிரம அறக்கட்டளை நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: