வியாழன், 24 ஏப்ரல், 2025

பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது!

பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிமலை சாலையில் உள்ள எல்லைமேடு அருகே பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக 7 பேர் நடந்து வந்தவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வங்கதேசத்தை சேர்ந்த இத்ரிஷ் அலி (வயது 20), ஷான்தா (வயது 37), மொகின்மியா (வயது 34), முகமது பாரூக் உசேன் (வயது 31), முகமது பெல்லா உசேன் (வயது 27), முகமது ஹர்சத் (வயது 34), முகமது பாஹிம் உசேன் (வயது 24) என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: