புதன், 9 ஏப்ரல், 2025

ஹென்றி ஊல்ஸி நிறுவனத்தின் சார்பில் அமோகம் என்ற உயர்தர சைவ உணவகம் திறப்பு விழா.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

ஹென்றி ஊல்ஸி நிறுவனத்தின் சார்பில் அமோகம் என்ற உயர்தர சைவ உணவகம் திறப்பு விழா. 

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஹென்றி ஊல்சி நிறுவனத்தின் சார்பில் உயர்தர கேக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்
 கருப்பூர் அரசு பொறியியற் கல்லூரி அருகே அமோகம் என்ற பெயரில் புதிய உயர்தர சைவ உணவக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த புதிய உணவகத்தின் திறப்பு விழாவிற்கு நிர்வாக இயக்குனர்கள் சதீஷ்குமார், சித்திரை செல்வி, சரவணகுமார் மற்றும் சுஜிதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்த விழாவில்,  தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய உணவகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் திருவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு உணவகத்தின் அடுமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் சமையல் கூடத்தினை கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே பி நடராஜன் திறந்து வைத்தார். நேவல் பிராப்பர்ட்டீஸ் அண்ட் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரேமலதா கார்த்திகேயன் முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். இந்த புதிய உயர்தர சைவ உணவகத்தின் திறப்பு விழாவிற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து தொடர்ந்து நல் ஆதரவினை வழங்கிட வேண்டுமென ஹென்றி ஊல்சி நிறுவனத்தின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: