சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். விசிக தோழமைக் கட்சி நிர்வாகி ஒருவர் பேசிய பேச்சுக்கு மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி குறுக்கிட்டதால் ஆர்ப்பாட்டத்தில் பெரும் சலசலப்பு.
நாடு முழுவதும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலும் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் தற்பொழுதும் எந்தவித குறையும் இல்லாமல் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி. இந்த நிலையில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வக்பு வாரிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்கள் காஜா மைதீன், மொழி அரசு, டாக்டர் சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் இமயவர்மன் உள்ளிட்ட மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்த வகுப்பு வாரிய சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு உண்டான சொத்துக்களை சூறையாடும் அரசாக மத்திய அரசு திகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியதோடு அதனை அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது ஆர்ப்பாட்டத்தை பொருத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தோழமைக் கட்சிகள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஐ எம் யு எல் போலிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொலைவின் கட்சி நிர்வாகி ஒருவர் நாடு முழுவதும் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் கேரள அரசு மட்டும் இந்த சட்டத்தை முதல் மாநிலமாக இன்று செயல்படுத்த உள்ளதாக தகவலை வெளிப்படுத்தினார், அப்போது குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகி பிரவீன் என்பவர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டக் களத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒரே ஒரு செய்தி நாளிதழ் மற்றும் செய்தி சேனலில் வெளியிட்ட செய்தியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகி பேசியது வருத்தம் ஏற்படுவதாக உள்ளதாகவும் அதற்கான விளக்கத்தை மட்டுமே நான் கொடுத்தேன் என்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகி பிரவீன் விளக்கம் அளித்தார்.
0 coment rios: