செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்  பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை குறித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து கருப்பு நிற ஆடை அணிந்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கார்த்தி, நாகராஜ் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்.விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40% மீண்டும் நடைமுறைப் படுத்துதல்,போன்ற பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சுந்தர்ராஜ்,ராஜீ வரவேற்புரை ஆற்றினர்.அரசு பணியாளர்கள் சங்க மாநில தலைவி சுகமதி முன்னிலை வகித்தார்.மேலும் இதில் நாகேந்திரன்,ஹரிகரன், சுப்பிரமணி,ரவிக்குமார், சரவணன்,சசிகலா,சிலம்பு, அருண்குமார்,பாரதிராஜா, ஜெயக்குமார்,சிவபாரதி, முருகேசன்,விக்கி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: