இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி வெளியேறியது. பின்னர் சிறுத்தைப்புலி திம்பம் மலைப்பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையோர தடுப்பு சுவரில் சுற்றித்திரிந்தது.
அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை நேரில் பார்த்து அச்சமடைந்தனர். இதனால் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டு, வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தைப்புலியை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறிது தூரம் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இந்த காட்சி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0 coment rios: