புதன், 2 ஏப்ரல், 2025

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது..
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி வெளியேறியது. பின்னர் சிறுத்தைப்புலி திம்பம் மலைப்பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையோர தடுப்பு சுவரில் சுற்றித்திரிந்தது.

அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை நேரில் பார்த்து அச்சமடைந்தனர். இதனால் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டு, வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தைப்புலியை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறிது தூரம் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இந்த காட்சி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: