சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கந்த சஷ்டியை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி அருள்மிகு பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்.
தமிழ் கடவுள் ஆன முருக பக்தர்கள் மாதந்தோறும் சஷ்டி அன்று விரதம் இருந்து பழனி உள்ளிட்ட எம்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருவது வழக்கம். அதன்படி இன்று சஷ்டி என்பதால் முருக பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு அருகாமையில் உள்ள சிவாலயங்களுக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள முருகன் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று காலை ஆறு மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு மூலவரான இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு பால் இளநீர் சந்தனம் மஞ்சள் மற்றும் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கோவில் நிறுவனர் பாபு சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் இந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டனர். பின்னர் எம்பெருமான் தமிழ் கடவுள் ஆன ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான முருகபக்தர்கள் கலந்து கொண்டு பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணியின் அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட பக்தகோடிகளுக்கு திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: