சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஏற்காட்டில் தொடரும் மழை. மலைப்பாதையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு. சுற்றுலா பயணிகள் கடும் அவதி.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் வரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதன் காரணமாக ஏற்காட்டிற்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகள் பெரிதும் நிம்மதி அடைந்தனர் என்றால் அது மிகை அல்ல.
0 coment rios: