சனி, 5 ஏப்ரல், 2025

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்.

சேலம் தெற்கு கோட்டம் மற்றும் சேலம் மேற்கு கோட்டம், சார்பாக சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் நடைபெற்றது. மின் கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பம் சம்பந்தமாக நடைபெற்ற இந்த முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார், சேலம் மாவட்ட ஆட்சியர் விழாவில் கலந்து கொண்டு நுகர்வோரகளிடம் மனுக்களை பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த முகாமில் சேலம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் 
திருநாவுக்கரசு, மேற்கு கோட்ட பொறியாளர் ராஜவேல், தெற்கு கோட்ட பொறியாளர் அன்பரசன், உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ், சத்தியமாலா, உதவி பொறியாளர்கள் பணியாளர் அனைவரும் கலந்து கொண்டு நுகர்வோர்களிடம் மனுக்களை பெற்று  குறைகளை தீர்க்க வேண்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: