ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ஹக்கீம் முன்னிலை வகித்தார்.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் த.வெ.க. மாவட்ட பொருளாளர் முருகேஷ், துணைச்செயலாளர்கள் பிரகாஷ், மஞ்சு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மண்டல செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் உமர் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: