வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை அவர்கள் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், மற்றும் ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரரும் சிறந்த சமூக சேவகர்மான சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் தலைமையில் பொருளாளர் கேசவன், அமைப்பாளர் குமார் மற்றும் துணைச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் காங்கிரஸ் பேரியக்கத்தில்  தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த சேலத்தைச் சேர்ந்த நாகா அரவிந்தன் மற்றும் நிர்வாகிகளை செல்வப் பெருந்தகை வாழ்த்தி வரவேற்றார். அப்போது அமைப்புச் செயலாளர் ராம் மோகன் கணபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா அரவிந்தன் அவர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் பொதுச்செயலாளராக அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சக்பல் மற்றும் செல்வப் பெருந்தகை ஆகியோரின் நல்லாசியுடன் நியமித்துள்ளதாகவும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பொற்கால ஆட்சி அமைய முதன்மை செயல் வீரராக பணியாற்றுவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும்,  இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் மாநிலத் தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இணைந்துள்ள நாகா அரவிந்தன் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளிலும் உள்ள மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் மாநிலத் தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: