வியாழன், 3 ஏப்ரல், 2025

சேலம் ஒன்பதாவது கோட்டத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுப்பது மற்றும் நாய்களை பிடிப்பதில் கையாளும் புதிய யுக்திகள் குறித்தான பயிற்சி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஒன்பதாவது கோட்டத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுப்பது மற்றும் நாய்களை பிடிப்பதில் கையாளும் புதிய யுக்திகள் குறித்தான பயிற்சி.

நகர மற்றும் மாநகர பகுதிகளில் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனிடையே சாலையில் தனியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பெரியவர்கள் வரை ஏராளமான நாய்கள் சூழ்ந்து கடித்து குதறும் வைரல் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை தடுக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட தான் வருகிறது. 
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேலம் மாநகராட்சி சார்பாக நாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்கவும், தடுப்பூசியின் அவசியம், ரேபிஸ் போன்ற கிருமிகளை எப்படி தடுப்பது, பாதுகாப்பாக எப்படி நாய்களை பிடிப்பதில் யுக்திகள் கையாளுவது என பயிற்சி  மேற்கொள்ளப்பட்டது. ஒன்பதாவது போட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வ லிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் ஹரி கணேஷ் மற்றும்  சுரேஷ் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: