இதற்கிடையே கடந்த சில நாட்களாக மன உளைச்சல் ஏற்பட்டு யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரவீன் நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே இருக்கும் கிணற்று பகுதியில் பிரவீனின் செருப்பு கிடந்தது. இதை பார்த்த உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரை தேடிப் பார்த்தனர். அப்போது, பிரவீன் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர், பிணத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த பிரவீன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
0 coment rios: