வியாழன், 17 ஏப்ரல், 2025

கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இரண்டாவது நாளாக ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இரண்டாவது நாளாக கள் ஆய்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 17) ஈடுபட்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பழங்குடியினர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஏப்ரல் 16) ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (ஏப்ரல் 17), கோபிசெட்டிபாளையம் வட்டம், நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டு, தினசரி வரப்பெறும் பாலின் கொள்ளளவு, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சி, புதுசாமி கோயில் வீதி, ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் வட்டம், கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் (சத்துணவு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் தனபாக்கியம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: