பொங்கல் 2026 விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணையை வழங்கி பல லட்சம் நெசவாளர்களுக்கு ஆறு மாத வேலை வாய்ப்பை உறுதி செய்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், கைத்தறி துறை அமைச்சரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் விசைத்தறி நெசவாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் எல்.கே.எம் சுரேஷ் கூறியதாவது, அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளான, நூல் டெண்டர், நூல்களை டையிங் செய்யும் பணிகள் முதலியவற்றை, விரைவாக மேற்கொண்டு, மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாத முதல் வாரத்துக்குள், விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியை துவங்குவதற்கும், கடந்த ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட வேஷ்டி மற்றும் சேலைகளை இந்த ஆண்டு உற்பத்திக்கான அளவீடுகளில் குறைக்காமல் ஒரு கோடியே 77 லட்சம் வேஷ்டி மற்றும் சேலைகளை முழுமையாக உற்பத்தி செய்ய வழி வகுத்து விசைத்தறி நெசவாளர்களுக்கு முழுமையாக ஆறு மாத கால வேலைவாய்ப்பை உறுதி செய்து தரவேண்டும் எனவும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
0 coment rios: