சேலம்.
S.K. சுரேஷ்பாபு
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
அகவை 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கவனியீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யூப் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் உள்ளிட்டோர் முன்னில வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராகவன் மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் மாநில மகளிர் அணி அமைப்பாளர் பிரபாவதி ஒலித்து ஒரு கலந்து கொண்டு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 வழங்கிட வேண்டும் மற்றும் மருத்துவ படி ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தனபால் மேனாள் மாவட்ட தலைவர் மாதவன் மேனன் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு உட்பட மாவட்ட நிர்வாகிகள் ஓய்வூதியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: