வியாழன், 17 ஏப்ரல், 2025

சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீர்த்தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீர்த்தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தீ விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் சேலம் அரசு மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் சிகிச்சையும் ஐயா வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஊழிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் சேலம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவகுமார் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் கலந்து கொண்டு சமையல் செய்தவுடன் கேஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அனைத்து விட வேண்டும், ஆடையில் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாமல் நின்று கீழே படுத்து தரையில் உருளுங்கள் பின்னர் குளிர்ந்த நீரை தீக்காயங்களுக்கு ஊற்றுங்கள் மற்றும் பள்ளி நடக்கும்போது நுழைவு வாயில் கதவுகள் மற்றும் அவசர வழிகளை திறந்து வையுங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வீட்டில் திடீரென தீப்பிடித்தால் அதாவது தீயினால் ஏற்படும் விபத்து, மின்சாரத்தால் ஏற்படும் விபத்து மற்றும் ஆயில் தீயினால் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பனவற்றை தத்ரூபமாக அதற்கான உபகரணங்களை கொண்டு நிகழ்த்திக் காட்டியது அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு இருந்த அனைத்து நோயாளிகளின் உற்றார் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தீ விபத்து நிகழும் பொழுது மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை காவலர்கள் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் மூலமாகவே நிகழ்த்தி காட்டியது அனைவரின் வரவேற்பினையும் பெற்றது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: