இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் வனப்பகுதி சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சமடைந்தனர். இதனால் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டனர். பின்னர் வாகனங்களில் இருந்தபடியே புலியை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
புலி ரோட்டை கடந்து சென்றதும் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர். மேலும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0 coment rios: