சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம். மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சேலம் மாவட்டம் வாழப்பாடி நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக கூட்டத்தில், துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி பிரபு, வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் வீரபாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நகர ஒன்றிய பேரூர் ஆகியவற்றிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமித்த கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்ட ன. மேலும் இந்த அறிமுக கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் பேசுகையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்களுக்கு இடையே எந்த விதமான சூழ்நிலையிலும் காழ்ப்புணர்ச்சி என்பது வந்துவிடக் கூடாது என்றும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கக் கூடாது இருவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்து திரும்பிய நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வீட்டில் 234 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்த எஸ் ஆர் சிவலிங்கம், அந்த வெற்றியை உறுதி செய்ய சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியோடு இணைந்து பணியாற்றும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பிரசன்னா மற்றும் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் துணை பொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கமாக விளக்கி கூறினர்.
0 coment rios: