சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வேக தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசி உயிர் பாதுகாப்பை உறுதி செய்த மாமன்ற உறுப்பினர்.
மாநகர மற்றும் நகர சாலைகளில் இருசக்கர வாகனங்கள் உட்பட கனரக வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே வேக தடைகள் அமைப்பது வழக்கம். இது போன்ற அமைக்கப்படும் வேகத்தடைகள் மீது இங்கு வேகத்தடை உள்ளது என்பதை அதன் மீது வெள்ளை வண்ணம் பூசி இரு சக்கரை மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதுபோன்று ஒன்னும் பேசாமல் காணப்படும் வேகத்தை காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு அதன் வாயிலாக உயிர் பறி ஏற்படும் அளவிற்கு அதிக சாதியை கூறுகள் உள்ளன என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட வீராணம் பிரதான சாலையில் உள்ள வாய்க்கால் பட்டறை பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தரையின் வாயிலாக நாள்தோறும் இருசக்கர வாகனங்கள் உட்பட கனரக வாகனங்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இதனை அறிந்த 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம், பொதுமக்கள் உதவியுடன், அன்றாடும் நிகழும் சாலை விபத்துகளில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் விதமாக அந்த பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணத்தை பூசி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை மேற்கொண்டார். மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
0 coment rios: