மேலும், அங்கிருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இந்த விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
விபத்து நடந்ததும் ஓட்டுநர் , நடத்துநர் பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடிவிட்டனர். காயம் அடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: