சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகைMLA., அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே வீ. தங்கபாலு அவர்களின் ஆலோசனையின் பேரில் சேலம் கோட்டை மைதான பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் வி பாஸ்கர் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியினர் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மத்தியில் ஆளும் பிஜேபி அரசு சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றியதை கண்டித்தும், தமிழ்நாடு அரசுக்கு முறையாக அளிக்க வேண்டிய கல்வி தொகை ரூ2400 கோடிக்கு மேல் நிறுத்தி வைத்ததை கண்டித்தும் தமிழ்நாடு செலுத்திய ஜிஎஸ்டி மூலம் பெறப்பட்ட தொகையினை தமிழ்நாட்டுக்கு முறையாக வழங்காததை கண்டித்தும் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய சுமார் ரூ4034/ கோடி வழங்காததை கண்டித்தும் நீட் தேர்வு பிரச்சனையில் மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொள்வதால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்காததை கண்டித்தும், பாஜக ஆளாதமாநிலங்களில் ஆர் என் ரவி போன்ற கவர்னர்களை நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்கு தொந்தரவு கொடுக்கும் போக்கை கண்டித்தும் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர்கள் துணை மேயர் மாமன்ற உறுப்பினர்கள் மண்டல டிவிஷன் வட்டார பேரூராட்சி கிராம கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளான இளைஞர் காங்கிரஸ் மகிளா காங்கிரஸ் சேவா தளம் வர்த்தக பிரிவு விவசாய பிரிவு, Sc/St பிரிவு சிறுபான்மை பிரிவு வழக்கறிஞர்கள் பிரிவு ஓபிசி மனித உரிமை பிரிவு அமைப்பு சாரா பிரிவு Rti பிரிவு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதம் ஊடகப்பிரிவு நெசவாளர் பிரிவு INTUC மற்றும் பிற சார்பு அமைப்பைச் சார்ந்தவர்களிட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: