புதன், 9 ஏப்ரல், 2025

சேலம் அன்னதானபட்டியில் ஸ்ரீ ஆதிபராசக்தி காளியம்மன் திருக்கோவின் ஜீரணோதரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K.சுரேஷ்பாபு.

சேலம் அன்னதானபட்டியில் ஸ்ரீ ஆதிபராசக்தி காளியம்மன் திருக்கோவின் ஜீரணோதரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம்  அன்னதானப்பட்டி பழனியப்பா காலனி பகுதியில் ஸ்ரீ மணி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ முனியப்பன், ஸ்ரீ சப்த மாதாக்கள் உள்ளிட்ட ஸ்ரீ ஆதிபராசக்தி காளியம்மன் திருக்கோவிலின் ஜீரணதாரன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த மாத 31ஆம் தேதி பாலி போடுதல் முகூர்த்தக்கால் நடுதல் உள்ளிட்ட வைபவங்களுடன் தொடங்கிய இந்த மகா கும்பாபிஷேக விழாவில் நேற்று கணபதி பூஜை புண்ணியாக வாசகம் பஞ்சகவ்யம் கணபதி ஹோமம் உடன் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசால சாலையில் முதல் கால வேள்வி பூஜை தொடங்கியது. திருக்கோவலின் தலைவரும், பிரபல சித்த மருத்துவருமான தங்கதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, மிருத்சங்கரனம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், திரவியாஹீதி, ஆகியவற்றுடன் இரண்டாம் கால வேள்வி பூஜை இன்று காலை தொடங்கியது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித கலசங்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து காலை சுமார் 10 மணியளவில் ஸ்ரீ ஆதிபராசக்தி தேவி ஸ்ரீ காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் அன்னதானப்பட்டி லைன்மேடு நெத்திமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர்களின் அருள் பெற்றுச் சென்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்கோவிலின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வாசுதேவன் குமாரராஜா, பாலாஜி சதீஷ் சபாபதி கோகுல் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: