செவ்வாய், 13 மே, 2025

ஈரோட்டில் போர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கிய அதிமுக பிரமுகர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடைபெற்றது.
 இந்த கூட்டத்தில் 46 புதூர் வில்வா சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகானந்தம் மற்றும் அக்கட்சியினர் சிலர் பஹல்காம் சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்த போரில் ஏற்பட்ட பாதிப்புக்கான நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் வழங்கினர்.

அப்போது, அதிமுகவைசேர்ந்த டாக்டர் சிவமுருகன், சுனில்ராஜ், பன்னீர்செல்வம், பாஸ்கர், ராஜ மாணிக்கம், அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: