புதன், 14 மே, 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.15) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின் பாதை மற்றும் தண்ணீர்பந்தல் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிபாளி மின் பாதைகளில் நாளை (மே.15) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின் பாதை (காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா முதல் ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் வரை, பெருந்துறை மெயின் ரோடு, காந்தி நகர் காலனி, ஓ.ஏ.ராமசாமி வீதி, பழனியப்பா வீதி, கொங்கு கலையரங்கம் மற்றும் அதன் பின்புறம், சின்ன முத்து 2 வது வீதி மற்றும் ஈ.பி.காலனி.

தண்ணீர்பந்தல் துணை மின் நிலைய சென்னிபாளி மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம் பாளையம், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டி பாளையம், மைலாடி, நடுப்பாளையம், அஞ்சுராம் பாளையம் மற்றும் சின்னதொட்டி பாளையம்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: