கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் வழியில் சர்க்கரை பள்ளம், குறும்பூர் பள்ளங்களிலும் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் காடகநல்லி எக்கத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக "ஆரேதள்ளம்" பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து மாக்கம்பாளையம் - கோம்பையூர் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் மாக்கம்பாளையம் கோம்பைதொட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையத்தை சுற்றியுள்ள கரளயம், ஏலஞ்சி, காடகநல்லி, எக்கத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திப்பநாயக்கனூர் எக்கத்தூர் பள்ளத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
0 coment rios: