இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தின் அருகில் உள்ள இடங்களை சோதனை செய்தபோது, எல்பிபி வாயக்க்கால் கரையில் குருணை மருந்து கலந்த கோழி இறைச்சியின் தோல்கள் மற்றும் குருணை மருந்துகள் சிதறி கிடந்தது. மேலும், உணவளிக்கும் தட்டில் குருணை மருந்து கலந்ததற்கான தடயமும் கிடைத்தது. தொடர்ந்து, காணாமல் போன இரண்டு நாய்களில், ஒரு நாயின் உடல் அருகில் உள்ள தோட்டத்து கால்வாய் புதரில் கண்டுபிடிக்கப்பட்டு, உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, இதுசம்மந்தமாக அப்பகுதியில் குடியிருந்து வரும் மரம் ஏறும் தொழிலாளி பொன்னுசாமி என்பவரது மகன் பழனிச்சாமி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழனிச்சாமி வளர்த்து வந்த கோழிகளை நாய்கள் அடிக்கடி தோட்டத்திற்குள் புகுந்து கடித்து கொன்றதில் இதுவரை சுமார் 30 கோழிகள் இறந்துவிட்ட காரணத்தால், அதை கோழி இறைச்சிகளில் குருணை மருந்து கலந்து வாய்க்கால் பகுதியில் வீசியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.
0 coment rios: